பதற்றத்துடன் செல்லும் வாகன ஓட்டிகள்

Update: 2023-04-16 11:59 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் மற்றும் ஒன்றியத்தை சேர்ந்தது தேனூர் கிராமம். இந்த கிராமம் தான் பெரம்பலூர் மாவட்டத்தின் தென்மேற்கு திசையில் உள்ள கடைசி கிராமமாகும். பெரம்பலூர் மாவட்டத்தின் கடைசி கிராமத்தையும், திருச்சி மாவட்டத்தில் உள்ள புத்தனாம்பட்டியையும் இணைக்கும் விதத்தில் சாலை உள்ளது. இந்த சாலை சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவு கொண்டதாகும். முதலில் உள்ள தார்ச்சாலை ஆலத்தூர் ஒன்றிய கட்டுப்பாட்டிலும், அடுத்ததாக உள்ள அகலம் குறைந்த காங்கிரீட் சாலை வனத்துறை கட்டுப்பாட்டிலும் வருகிறது. இந்த சாலை வழியாக தினமும் பொதுமக்கள் மற்றும் புத்தனாம்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் நேரு நினைவு கல்லூரிக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர். சாலை பழுதடைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பதற்றத்துடனேயே வாகனத்தில் சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்