வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-04-12 15:42 GMT

சத்தியமங்கலம் அருகே உள்ள குத்தியாலத்தூர் என்ற மலைக்கிராமத்தில் இருந்து திண்ணியூர் வழியாக சின்ன சாலட்டி வரை 6 கி.மீ. தூரம் தார்சாலை அமைப்பதற்காக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது. ஆனால் பணியை இன்னும் தொடங்கவில்லை. இதனால் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு சென்று வருகிறார்கள். விரைவில் தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவன செய்வார்களா?

மேலும் செய்திகள்