எச்சரிக்கை பலகை அவசியம்

Update: 2023-04-09 17:25 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த தொளசம்பட்டி பஸ் நிறுத்தம் போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாகும். மேலும் சாலையோரத்தில் அரசு பள்ளி உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் லாரி, கார், இருசக்கர வாகனங்கள் வேகமாக சென்று வருகிறது. இதனால் இந்த பகுதியில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி அங்கு வேகத்தடை, எச்சரிக்கை பலகை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்