சாலையோரத்தில் பள்ளம்

Update: 2023-04-09 15:34 GMT

பெரம்பலூர்-ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வேப்பந்தட்டை பஸ் நிறுத்தம் அருகே தனியார் திருமண மண்டபம் எதிரே தார் சாலை ஓட்டியுள்ள பகுதிகளில் ஒரு அடி பள்ளம் உள்ளது. அதாவது சாலையில் வரக்கூடிய வாகனங்கள் தார் சாலையை விட்டு பக்கவாட்டில் இறங்கினால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. குறிப்பாக சாலையில் கனரக வாகனங்கள் வரும்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் சாலையை விட்டு கீழே ஒரு அடி பள்ளத்தில் திடீரென இறங்கும் சூழ்நிலை உள்ளது. அப்போது பலர் தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையோரத்தில் உள்ள பள்ளங்களை மண் கொட்டி சரி செய்து விபத்து ஏற்படுவதை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்