சீரமைக்கப்படாத மண் சாலை

Update: 2023-04-09 13:09 GMT

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் இருந்து புன்னம்சத்திரம் செல்லும் சாலையில் உள்ள புகழூரில் ரெயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரெயில், சரக்கு ரெயில்கள் செல்லும்போது இந்த ரெயில்வே கேட் மூடப்பட்டிருக்கும். கேட் மூடப்பட்ட நேரத்தில் இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்லும் வகையில் மண் சாலை போடப்பட்டிருந்தது. அந்த மண்சாலை மழையின் காரணமாக மிகவும் குண்டும், குழியுமாக இருந்தது. பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் மண்சாலையை சீரமைத்தனர். ஆனால் தற்போது அந்த மண் சாலை வழியாக இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு அதிக இடங்களில் நெடுவிலும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமாக உள்ள மண் சாலையை சீரமைத்து வாகனங்கள் தங்குதடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்