கால்வாய் இன்றி அமைக்கப்படும் சாலை

Update: 2023-04-09 12:23 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், சிறுவயலூர் ஊராட்சியில் உள்ள தேவேந்திர குல தெருவில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு புறம் மட்டும் கால்வாய் ஏற்படுத்தப்பட்டு மறுபுறம் சீரமைக்காமல் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மழைபெய்யும்போது இப்பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இரண்டுபுறமும் கால்வாய் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்