மயிலாடுதுறை பட்டமங்லகம் தெருவில் இருந்து துலாகட்டம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை குழி ஒன்று உள்ளது. இந்த பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. மேலும், சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீரால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?