தார்சாலை போட்டாச்சு..

Update: 2023-04-09 07:09 GMT

கோவை மாநகராட்சி 12-வது வார்டு உடையாம்பாளையம் வஞ்சியம்மன் நகரில் குடிநீர் குழாய் பதிக்க தார்சாலை தோண்டப்பட்டது. அந்த பணி முடிவடைந்த பிறகும் சாலை சீரமைக்கப்படாமல் இருந்தது. இதனால் தார்சாலை மண்சாலையாக மாறி மழை பெய்யும்போது சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக மீண்டும் தார்சாலை போடப்பட்டு உள்ளது. இதற்கு காரணமான 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி. 

மேலும் செய்திகள்