விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வழியாக செல்லும் தங்க நாற்கரச்சாலையிலும், அதன் இரு புறங்களிலும் செல்லும் அணுகு சாலையிலும் அளவிற்கு அதிகமாக மணல் குவிந்துள்ளதால் அதன் வழியாக செல்லும் இரு சக்கர வாகனங்கள் மணலில் சிக்கி சறுக்கி விழுந்து விபத்திற்கு உள்ளாகின்றன. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் உள்ள மணலை அப்புறப்படுத்த வேண்டும்.