சேலம் இரும்பாலை ரோட்டில் உள்ள பால்பண்ணை பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால் வயதானவர்கள், குழந்தைகள், பஸ்சுக்காக வெகு நேரம் வெயிலில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. தற்போது கோடை காலம் தொடங்கி இருப்பதால் பொதுமக்கள் நலன் கருதி அங்கு நிழற்கூடம் அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்.
-சாம்ராஜி, சேலம்.