மூடப்படாத குழி

Update: 2023-03-29 16:09 GMT

பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் 13-வது வார்டுக்கு உட்பட்ட போலீஸ் காலனி 8-வது குறுக்கு தெருவில் சாலையின் நடுவே குடிநீர் குழாய் கேட் வால்வு வைக்க குழி தோண்டப்பட்டது. அந்த குழி நீண்ட நாட்களாக மூடப்படாமல் உள்ளது. இந்த வழியாக இரவு நேரத்தில் நடந்து செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் குழியை கவனிக்காமல் தவறி விழுந்து காயமடையும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இதை தவிர்த்திட குழியை மூட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோ.செந்தில், போலீஸ் காலனி, பாப்பாரப்பட்டி.

மேலும் செய்திகள்