சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-29 16:06 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த அத்தி மூட்லு ஊராட்சிக்கு உட்பட்ட அகரம் கிராமத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்திற்கு மாரண்டஅள்ளி வரை சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. அதனால் இந்த பகுதிகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அகரம் உயர்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பரமசிவம், அகரம், தர்மபுரி.

மேலும் செய்திகள்