கரூர் மாவட்டம் நொய்யல் காவிரி ஆற்றங்கரையில் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கும், புதைப்பதற்கும் சுடுகாடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுடுகாட்டுக்கு செல்வதற்கும், காவிரி ஆற்றுக்குள் செல்வதற்கும் தார் சாலை அமைக்கப்பட்டது. தார் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையின் வழியாக இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.