போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-03-26 12:50 GMT

போத்தனூர் அம்மன் நகர் பகுதியில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்சார பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை மின்சார வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக அச்சத்துடன் சாலையில் சென்று வரும் நிலை உள்ளது. எனவே அந்த மின்சார பெட்டியை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்