ஆபத்தான சாலை வளைவு

Update: 2023-03-26 11:02 GMT

திருவாரூர் தாலுகா காட்டூர் பகுதி கலைஞர் அருங்காட்சியகம் அருகே உள்ள சாலையில் ஆபத்தான வளைவுகள் உள்ளன. இந்த பகுதியில் பள்ளி மற்றும் கடைவீதிகள் உள்ளன. இதனால் அங்கு எப்போதும் ஆள்நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும். இந்த நிலையில் சாலை வளைவு பகுதியில் வேகமாக வரும் வாகன ஓட்டிகளால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள்,மாணவ-மாணவிகள் அச்சத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மேற்கண்ட பிரச்சினைக்கு உரிய தீர்வுகாண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்