ஆத்தூரில் இருந்து சேர்ந்தபூமங்கலம் வழியாக புன்னக்காயல் செல்லும் சாலை குறுகலாக உள்ளது. சேர்ந்தபூமங்கலத்தில் சாலையின் இருபுறமும் வாய்க்கால்கள் உள்ளதால், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட சிரமமாக உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை அகலப்படுத்துவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.