ஓடை பாலத்தின் தடுப்பு சுவர் சேதம்

Update: 2023-03-26 08:24 GMT
திருச்செந்தூர் மேல ரத வீதியில் இருந்து பாரதியார் தெருவுக்கு செல்லும் வழியில் உள்ள ஆவுடையார்குளம் மறுகால் ஓடை பாலத்தின் தடுப்பு சுவர் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள், பொதுமக்கள் எதிர்பாராதவிதமாக ஓடைக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த தடுப்பு சுவரை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்