கோழிக்கழிவுகளால் துர்நாற்றம்

Update: 2023-03-22 12:58 GMT
கிருஷ்ணகிரியில் திருவண்ணாமலை பிரிவு சாலை பகுதியிலும், கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும் பகுதியிலும் அடிக்கடி கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக கோழிக்கழிவுகளை மூட்டைகளில் கட்டி சாலையோரமாக போட்டு செல்கிறார்கள். அந்த மூட்டைகளை நாய்கள் கடித்து இழுத்து சாலையில் போட்டு செல்கின்றன. இதனால் பல இடங்களில் துர்நாற்றம் வீசுகின்றன. எனவே சாலையோரத்தில் கோழிக்கழிவுகளை கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்