சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

Update: 2023-03-22 12:35 GMT
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கீழநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட மழவராயநல்லூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள செம்மண் சாலை மழை காலங்களில் சேறும், சகதியுமாக மாறி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கேரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்