மோசமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-03-22 09:50 GMT

ஊத்துக்குளி பிரதான சாலையில் சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் குடிநீர் பணிக்காக சாலை தோண்டப்பட்டது. அதன் பின்னர் சாலை சரியாக சீரமைக்கப்படாமலேயே உள்ளது. இதனால் இந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். சில நேரங்களில் நிலை தடுமாறி சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலையும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.


மேலும் செய்திகள்