வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2023-03-19 14:33 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காலாடிபட்டி சத்திரம் கிராமமானது முக்கண்ணாமலைப்பட்டி மற்றும் பல ஊர்களின் முக்கிய சந்திப்பாகும். இந்த சந்திப்பில் நகர, புறநகர மற்றும் தொலைதூர பஸ்கள் அனைத்தும் நின்று செல்கின்றன. மேலும், எந்நேரமும் கனரக வாகனங்கள், லாரிகள் சென்றவண்ணம் உள்ளதால் சாலையை கடக்க பெண்கள், பள்ளி மாணவ-மாணவிகள் அச்சமடைகின்றனர். எனவே, சத்திரம் மெயின்ரோட்டில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்