கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணி

Update: 2023-03-15 18:22 GMT
விழுப்புரம்-சென்னை நெடுஞ்சாலையில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகில் வாய்க்கால் பாலம் அமைக்கப்பட்டது. அப்பணிகள் முடிந்ததும் அப்பகுதியில் தார் சாலை அமைத்து சீரமைக்கப்பட்டது. ஆனால் அந்த தார் சாலை, அங்குள்ள சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரை ஒட்டினாற்போல் முழுவதுமாக அமைக்கப்படாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் சாலைக்கும், தடுப்புச்சுவருக்கும் அதிக இடைவெளி காணப்படுகிறது. தொடர்ந்து அந்த பணியை முடிக்காமல் அப்படியே கிடப்பில் போட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்