சாலை ஆக்கிரமிப்பு

Update: 2023-03-15 18:22 GMT
விழுப்புரம் மந்தகரையில் காமராஜர் வீதி, கீழ் வன்னியர் வீதியில் உள்ள சாலையை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து வருகின்றனர். இதனால் சாலை சுருங்கிப்போய் காணப்படுவதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவாகி வருகிறது. மேலும் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நொிசல் ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்