குண்டும், குழியுமான சாலை

Update: 2023-03-15 17:03 GMT

போடியை அடுத்த பத்ரகாளிபுரம் கிராமத்தில் தார்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் வெளியேறி சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கி நிற்கிறது. இதனை கவனிக்காமல் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்