வேகத்தடை வேண்டும்

Update: 2023-03-15 14:52 GMT
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தில் கரூர்-திருச்சி சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த சாலையானது எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்தே காணப்படும். இந்த பகுதியில் வேகத்தடைகள் எதுவும் இல்லாததால் இந்த வழியாக வரும் வாகனங்கள் வேகமாக வருகின்றன. இதனால் மாணவர்களும், பொதுமக்களும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் உதவியாக இருக்கும்.

மேலும் செய்திகள்