வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2023-03-15 13:11 GMT

கோவை ஒண்டிபுதூரை அடுத்த காமாட்சிபுரம் பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் வந்து பஸ்சுக்காக காத்திருக்கிறார்கள். அங்குள்ள சாலையில் வேகத்தடை எதுவும் இல்லை. இதனால் வாகனங்கள் அதிகமாகவும், அதிவேகமாகவும் செல்கின்றன. இதன் காரணமாக அவர்கள் சாலையை ஒருபுறம் இருந்து மறுபுறம் கடக்க அச்சப்படுகிறார்கள். எனவே வாகனங்களின் வேகத்தை குறைக்க அங்கு வேகத்தடை அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்