நடைபாதை வியாபாரிகளால் பாதசாரிகள் அவதி

Update: 2023-03-12 15:01 GMT
பெங்களூரு ஹென்னூர் பஸ் நிறுத்தம் பகுதியில் நடைபாதை ஒன்று உள்ளது. அந்த நடைபாதையில் சாலையோர வியாபாரிகள் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை வைத்து விற்பனை செய்கின்றனர். இதனால் பஸ் நிறுத்தத்திற்கு வருபவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் பாதசாரிகளும் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாமல் சாலையில் இறங்கி நடந்து செல்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த கடைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்