சாலையின் நடுவில் மின்கம்பம்

Update: 2023-03-12 09:37 GMT
கோவை மாநகராட்சி 55-வது வார்டு எஸ்.ஐ.எச்.எஸ். காலனி காவேரி நகர் பிரதான சாலையின் நடுவில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம் ஒன்று நிற்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் இரவில் மின்கம்பத்தில் மோதி காயமடைந்து செல்கின்றனர். சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே சாலையின் நடுவில் உள்ள அந்த மின்கம்பத்தை அகற்றி வேறு இடத்தில் நட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்