வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-03-12 09:34 GMT

கோவை சரவணம்பட்டி சத்தி சாலையில் அன்னூர் செல்லும் வழியில் சாலை பழுதடைந்து குழி ஏற்பட்டு உள்ளது. அந்த சாலையில் மிக வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் குழியில் ஏறி இறங்கும்போது, தவறி விழுந்து காயம் அடைந்து விடுகின்றனர். மேலும் வாகனங்களும் பழுதடைந்து வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே குழிகளை மூடுவதோடு சாலையை முழுமையாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும். 

மேலும் செய்திகள்