சாலை பணிகள் விரைந்து நிறைவேற்றப்படுமா?

Update: 2023-03-12 06:04 GMT

நெல்லை- பாபநாசம் இடையே சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சேரன்மாதேவி யூனியன் அலுவலகம் முதல் ரெயில்வே கேட் வரையிலும் பழைய சாலையை அகற்றி விட்டு, ஜல்லி கற்களை பரப்பி புதிய சாலை அமைக்கப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்களால் தூசுக்கள் கிளம்பி பொதுமக்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. எனவே காலை, மாலையில் தண்ணீர் தெளித்து புதிய சாலை அமைப்பதுடன் பணிகளை விரைந்து நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்