வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும்

Update: 2023-03-12 05:58 GMT
நெல்லை- முக்கூடல் மெயின் ரோட்டில் இருந்து சங்கன்திரடு செல்லும் சாலையில் மேம்பாலம் அருகில் உள்ள 2 வேகத்தடைகளில் வர்ணம் பூசப்படவில்லை. மேலும் அங்கு எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் வேகத்தடையில் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே ேவகத்தடைகளில் வர்ணம் பூசவும், அங்கு சாலையோரம் எச்சரிக்கை பலகைகள் வைக்கவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்