வேகத்தடைகள் பராமரிக்கப்படுமா?

Update: 2023-03-08 10:52 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் இருந்து வேப்பனப்பள்ளி செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் வேகத்தடைகள் அமைந்துள்ளன. விபத்துகளை குறைப்பதற்காக இந்த வேகத்தடைகள் அமைக்கப்பட்ட போதிலும், பல இடங்களில் வேகத்தடையால் விபத்துகள் நடந்து வருகின்றன. குறிப்பாக வேகத்தடை இருப்பதே தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் பலரும் சென்று விபத்துக்குள்ளாகி விடுகிறார்கள். அதனால் குந்தாரப்பள்ளி கூட்டு ரோடு முதல் வேப்பனப்பள்ளி செல்லும் சாலையில் வேகத்தடைகளில் வர்ணம் பூசி, முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்