கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையத்தில் இருந்து பாலத்துறை செல்லும் தார் சாலையில் சுமார் 200 மீட்டர் தூரம் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த சாலை வழியாக நடந்து செல்ல கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சாலை வழியாக செல்லும் பஸ்கள், லாரிகள், கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் ஊர்ந்து தட்டு தடுமாறி செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.