சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-05 07:29 GMT

கோவை மாநகராட்சி 80-வது வார்டு திரு நகர் 2-வது வீதி மற்றும் குறிஞ்சி கார்டன் ஆகிய இடங்களில் தார்சாலை உள்ளது. இந்த சாலை குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்டது. குழாய் பதித்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் சாலையை சீரமைக்கவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மழைக்காலத்தில் சாலை மேலும் மோசமாகிவிடுகிறது. மேலும் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே சாலையை விரைவாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்