புதுக்கோட்டை நகரின் முக்கிய இணைப்புச் சாலையான நரிமேடு - சமத்துவபுரம் சாலை, கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பிக்கப்படாமல் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சாலையில் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் கூர்மையான ஜல்லிக்கற்கள், அவ்வழியாகச் செல்லும் வாகனங்களின் டயர்களைப் பதம் பார்த்து அடிக்கடி பஞ்சராக்கி விடுகின்றன. மேலும் இரவு நேரங்களிலும், மழைக்காலங்களிலும் இச்சாலையில் உள்ள குழிகளில் சிக்கி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே, இந்த சாலையை புதிய தார்ச்சாலையாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.