தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா உடன்குடி பேரூராட்சி 8-வது வார்டு சமத்துவநகர் கிராமத்தில் கடந்த 2020-ம் ஆண்டு சாலையை விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. பின்னர் கொரோனா தொற்று காரணமாக பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை. எனவே, குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.