சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-02-26 10:57 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் திருமுல்லைவாசல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள தார்சாலை முறையான பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேணடும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.



மேலும் செய்திகள்