குண்டும்,குழியுமான சாலை

Update: 2023-02-26 10:49 GMT

நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சாலை முறையான பராமரிப்பின்றி உள்ளது. இதனால் சாலை குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகளும், பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேணடும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்