பாதியில் நிற்கும் பணி

Update: 2023-02-26 10:00 GMT

அத்தாணி-பவானி பிரிவில் இருந்து அந்தியூர் வரை சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில் முனியப்பம்பாளையம் வரை பணி அகலப்படுத்தப்பட்டு்ள்ளது. அதன்பின்னர் அங்கிருந்து 5 கி.மீ. தூரத்துக்கு பணி நடைபெறாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு சென்று வருகிறார்கள். உடனே பாதியில் நின்ற ரோடு அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்