தினத்தந்திக்கு நன்றி

Update: 2023-02-22 13:46 GMT

அரியலூர் மாவட்டம், கீழ்ப்பழுவூர் அருணாசலம் நகரில் அமைந்துள்ள தெருக்களில் சாலை அமைக்க கடந்த 6 மாதங்களுக்கு முன்பு செம்மண் கொட்டப்பட்டு மழையில் கரைந்து போய் சாலை அமைக்காமல் தெருக்கள் சேறும், சகதியுமாக இருந்தன. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தற்போது சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்