சாலை பணியால் மூச்சுத்திணறல்

Update: 2023-02-22 12:19 GMT

நெல்லை- பாபநாசம் இடையே சாலை விரிவாக்க பணிக்காக, கல்லிடைக்குறிச்சி, காருகுறிச்சி, வெள்ளாங்குளி உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறமும் பள்ளம் தோண்டி, ஜல்லி கற்களை நிரப்பியுள்ளனர். அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது தூசுக்கள் எழும்புவதால் பொதுமக்கள் மூச்சுத்திணறலால் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு காலை, மாலையில் சாலையில் தண்ணீர் தெளித்து பணிகளை விரைந்து நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்