விபத்து அபாயம்

Update: 2023-02-22 08:05 GMT


நாகர்கோவில் சிதம்பரம்நகர் சாலை ஓரத்தில் கழிவுநீர் ஓடையின் மீது சிமெண்டு சிலாப்பு அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த சிமெண்டு சிலாப்பு சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலை வழியாக ஏராளமான இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் சென்று வருகின்றன. மேலும், பள்ளி மாணவ-மாணவிகளும் இந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த வழியாக நடந்து செல்லும் மாணவ-மாணவிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, மாணவ-மாணவிகள் நலன்கருதி சேதமடைந்த சிலாப்பை அகற்றி விட்டு புதிய சிலாப்பு அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கென்னடி ரோட்ரிகோ, கோட்டார். 

மேலும் செய்திகள்