ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2023-02-15 08:46 GMT

மணவாளக்குறிச்சியில் இருந்து குளச்சலுக்கு செல்லும் நெடுஞ்சாலையில் அரசு ஆரம்ப பள்ளி அருகில் சாலையின் இரு புறமும் நடைபாதை இருந்தது. தற்போது இந்த நடைபாதையை கடை உரிமையாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிள் சாலையில் நடந்து செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதசாரிகள் நலன்கருதி நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்