ஓசூரில் முக்கிய பகுதிகளான ஜனப்பர் தெரு, நாமால்பேட்டை, நஞ்சுண்டேஸ்வரர் கோவில் தெரு ஆகிய இடங்களில் சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் காலை முதல் இரவு வரை பொதுமக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து அதிகளவில் இருந்து வருகிறது. இந்த பகுதியில் சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகின்றது. எனவே, சாலைகளை அகலப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
-அன்பரசன், ஓசூர்.