தார் சாலை அமைக்கப்படுமா?

Update: 2023-02-12 14:31 GMT

கரூர் மாவட்டம், நடையனூர் அருகே பூலாங்காடு பகுதியில் இருந்து கரைப்பாளையம் தங்காயி அம்மன் கோவில் செல்லும் சாலையில் பாதி வரை மண் சாலையாகவும், குண்டும், குழியுமாகவும் உள்ளது. இந்த மண் சாலை வழியாக கரைப்பாளையம் பகுதியில் உள்ள கோவிலுக்கும், மற்ற பகுதிகளுக்கும், அந்த பகுதியை சேர்ந்தவர்களும் சென்று வருகின்றனர். மழைக்காலங்களில் இந்த மண் சாலை வழியாக செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த மண் சாலையை தார்சாலையாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்