சேறும்,சகதியுமான சாலை

Update: 2023-02-12 10:59 GMT

நாகை மாவட்டம் போழகத்தில் இருந்து நெய்குன்னம் செல்லும் சாலையை சீரமைக்கும் பணி நடந்து வந்தது. இதற்காக சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்த பணிகள் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். மழைக்காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை பணியை மீண்டும் தொடங்கி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்