சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-02-12 10:58 GMT

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் செட்டிபுலம் நடுக்காடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சாலை அமைப்பதற்காக மண் கொட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை அந்த மண் செப்பனிப்டபடாமல் அப்படியே கிடக்கிறது. இதனால் மழைக்காலங்களில் அந்த பாதை முழுவதும் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. மேலும், பாதை சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அந்த வழிதடத்தை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?

 

மேலும் செய்திகள்