கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையத்தில் இருந்து புகழூர் செல்லும் தார்சாலை போடப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதன் காரணமாக தற்போது தார்சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த தார் சாலை வழியாக அரசு டவுன் பஸ், பள்ளி, கல்லூரி வாகனங்கள், கார்கள், லாரிகள், டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் ஆங்காங்கே தார்சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் நிலை தடுமாறி செல்கின்றனர். இரவில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.