வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-02-12 07:25 GMT

கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட சோதனைச்சாவடி அமைந்துள்ள பகுதியில் வளைவுகள் அதிகமாக உள்ளது. மேலும் சத்திரகாவு பிரிவு சாலையில் இருந்து வரும்போது, இந்த சாலையின் உயரம் அதிகமாக உள்ளது. இதனால் சாத்திரகாவு சாலையில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சத்திரகாவு செல்லும் சாலையின் மேடான பகுதியை சாய்வாக சீரமைக்க வேண்டும்.

-சிவகுமார், கொல்லங்கோடு

மேலும் செய்திகள்