பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, சிறுகன்பூர் கிராமத்தில் தார் சாலை பெயர்ந்து குண்டும், குழியுமான காணப்படுகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி செல்கின்றனர். இதில் சிலர் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.